திருச்சியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள்.. கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவர்கள்.!

0 21882

திருச்சி வயலூரில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளை சந்தித்து கலந்துரையாடிய உணர்ச்சி பெருக்கூட்டும் சம்பவம் நடைபெற்றது.

தனியார் உடற்கல்வி கல்லூரியில் 1993- 94 ஆண்டில் படித்தவர்கள் தனியார் விடுதியில் மீண்டும் சந்தித்து கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

ஏறத்தாழ 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைந்தவர்கள் பழைய நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். ஒன்றாக பாடல்களை பாடியும் ஒருவரை ஒருவர் கல்லூரி நினைவுடன் அழைத்தும் கடந்த கால கல்லூரி நினைவுகளை அசை போட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments